தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நிகழ்ச்சி நாளை (27.4.2016) புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் திரு.முகல் வாஸ்னிக் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்வில் தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணித் தலைவர் பங்கேற்க இருக்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நாளை (27.4.2016) மாலை 6 மணியளவில் வடசென்னை அஜிஸ் முகமது கௌஸ் தெரு டி.பி.கே.தெரு சந்திப்பில் (பாரத் தியேட்டர் ரவுண்டானா அருகில்) நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், தேசிய செய்தித் தொடர்பாளர் திருமதி. குஷ்பூ சுந்தர், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன், திரு. உ.பலராமன், திரு.ஆ.கோபண்ணா, திரு. எம்.ஜோதி ஆகியோர் பங்கேற்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் ராயபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஆர். மனோ அவர்களை ஆதரித்து பிரச்சாரம் நடைபெற உள்ளது.
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 28.11.2015 தே.மு.தி.க.வின் மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ் சென்னை மாநகராட்சியின் ஆலந்தூர் உதவி ஆணையாளரை நேரில் சந்திக்க கைபேசி மூலம் முன்...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.10.2016) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியவை : நூறு...